சட்டசபையில் ஸ்டாலின் திட்டமிட்டு வன்முறை: அன்புமணி குற்றச்சாட்டு

anbumani ramadoss, chennai, state assembly election, tamil nadu
சென்னை – சட்டசபையில் திமுகவினர் மற்றும் முக ஸ்டாலினால் நடத்தப்பட்டது திட்டமிட்ட வன்முறை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ட்விட்டரில் கூறியுள்ளார். தமிழக அரசியல்  மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டசபையில் நடந்தது.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் இது தொடர்பாக அன்புமணி ட்விட்டரில், ”ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் மற்றும் மு.க. ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top