'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ

cm, former justice markandey katju, India, New delhi, sasikala, supreme court
புதுடில்லி: ‘சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க, எப்போது, அ.தி.மு.க., முடிவு செய்ததோ, அப்போதே அக்கட்சியின் கதை முடிந்து விட்டது’ என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., அழியும்:

அவர் தன், ‘பேஸ்புக்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கைப்பாவையை, சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம், அ.தி.மு.க., தன் மரணத்துக்கு குழி தோண்டி விட்டது. தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால், சந்தேகமே இல்லாமல், தி.மு.க., தான் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க., மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary:

NEW DELHI: ‘Sasikala appoint the puppet Chief Minister, anytime, Digg, made the decision, then the party is over the story’, as former Supreme Court Justice Katju commented firs.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top