கை, கால்களை கட்டி எரித்துக்கொலை – ஆலந்தூரில் கொடூரம்
tami nadu July 19, 2018,
சென்னை ஆலந்தூரில் வீட்டிலேயே ஒரு நபர் கை, கால்களை கட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூரில் வசித்து வந்தவர் முகமது சுல்தான். 40 வயது மதிக்கத்தக்க இவருக்கு சென்னை ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடை உள்ளது. இந்நிலையில் இன்று இவர் வீட்டில் ஏதோ எரிவது போல புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், முகமது இல்லாத நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என நினைத்துள்ளனர். அத்துடன் தீயை அணைக்கு முயற்சி செய்துள்ளனர். தீ மளமளவென எரிந்ததால், தீயை அணைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறிது நேரத்தில் தீயை அணைத்துவிட்டனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கருகிய நிலையில், ஒரு உடல் கிடந்துள்ளது. அந்த உடலை ஆராய்ந்த போது, அது வீட்டில் வசித்து வந்த முகமது எனத் தெரியவந்துள்ளது. அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை யாரோ அடித்து, கை, கால்களை கட்டி எரித்துக்கொன்றுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஏன்? கொலை செய்தனர். காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மேலும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கை, கால்களை கட்டி எரித்துக்கொலை – ஆலந்தூரில் கொடூரம்