சாலையில் விளையாடிய சிறுத்தைகள் : தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்

சாலையில் விளையாடிய சிறுத்தைகள் : தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்

tami nadu

ஈரோட்டில் சாலையில் இரண்டு சிறுத்தைகள் விளையாடியதால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் திணறினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் 5வது சாலையின் மையப் பகுதியில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போது, இரண்டு சிறுத்தை சாலையில் நின்றுள்ளன. வனப்பகுதிக்குள் இருந்து வழிதவறி வந்த இரண்டு சிறுத்தைகளும், நீண்ட நேரம் விளையாடியுள்ளனர். இதனால் அந்தச் சாலையில் வந்த வாகன ஓட்டிகள், அச்சத்தால் வண்டியை நிறுத்திவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பின்னர் வாகனங்களில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்ட ஒலி எழுப்பினர். ஆனால் சிறுத்தைகள் அங்கேயே விளையாடிக்கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக அவை விலகிச் செல்லவில்லை. பின்னர் சிறுத்தைகள் தொடர்பாக வன ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், இரண்டு சிறுத்தைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சாலையில் விளையாடிய சிறுத்தைகள் : தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்

Search

Back to Top