பைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை

பைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை

tami nadu

அரியலூரில் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஆக்கி பெண்ணிடமிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 

அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வி என்பவர், விசாயத்திற்கு பணம் தேவைப்பட்டதால் நகையை வங்கியில் அடகு வைத்துள்ளார். அந்தப் பணத்தில், ஒரு லட்‌சத்து 15 ஆயிரம் ரூபாயை இருசக்கர வாகன பெட்டியில் வைத்து விட்டு எல்.ஐ.சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் பஞ்சராகியிருந்துள்ளது. 

அதனால், அருகிலிருந்த கடையில் பஞ்சர் ஒட்டுவதற்காக இருசக்கர வாகனத்தை தாமரைச்செல்வி விட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தின் பெட்டியிருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். பணம் திருடு போனதை அறிந்த தாமரைச்செல்வி அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அரியலூர் காவல்துறையினர் விசாரணை ‌நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை

Search

Back to Top