ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை – பெட்டிக்கடைக்காரர் கைது

ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை – பெட்டிக்கடைக்காரர் கைது

tami nadu

விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் கல்லூரி சாலையில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அருகே பல முருகராஜா (45) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். பள்ளிக்கு அருகில் உள்ள கடை என்பதால், பென்சில், பேனா, சிறிய ரக நோட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மாணவிகள் இங்கே வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடையில் உரிமையாளர் பால முருகராஜா மனதில் கொடூர எண்ணம் கொண்டிருந்துள்ளார்.

(இதையும் படிங்க : குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ! சென்னை முதலிடம்)

இவர் கடைக்கு வரும் மாணவிகளுடன் அவ்வப்போது, தகாத முறையிலும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார். விவரம் அறியாத மாணவிகள், தந்தை வயதுடையவர் என்ற எண்ணத்தில் கடைக்கு வரும் போதெல்லாம் சாதாரணமாக பேசிச்சென்றுள்ளனர். ஆனால் வக்ர புத்தி கொண்ட முருகராஜாவோ, தனது தீய எண்ணங்களை நாளுக்குநாள் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மாணவிகள் இவர் கடைக்கு வருவதை குறைத்துள்ளனர். இருப்பினும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கடை என்பதால், சில நேரங்களில் வேறு வழியின்றி கடைக்கு வந்து சென்றுள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முருகராஜா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அதை மாணவிகளிடம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்தைக் கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டதும், கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியில் சென்று முறையிட்டுள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில் பெட்டிக்கடைக்காரரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை – பெட்டிக்கடைக்காரர் கைது

Search

Back to Top