தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை

தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை

tami nadu

இலங்கை சிறைகளிலிருந்து 16 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கடும் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 5-ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12 பேரும், 8-ஆம் தேதி 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், இலங்கையின் புதிய கடற்தொழில் சட்டத்தின் கீழ் 16 மீனவர்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனித்தனியே ஓராண்டு சிறை என மொத்தம் 2 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், தண்டனையை உடனே அமல்படுத்தாமல் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், 16 பேரும் மீண்டும் எல்லைதாண்டி கைதானால் 2 ஆண்டு சிறைத்தண்டனையை உடனடியாக அனுபவிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை

Search

Back to Top