எழுத்தாளர் செளபா திடீர் மரணம்
tami nadu June 11, 2018,
எழுத்தாளர் செளபா என்கிற செளந்திரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
மதுரை கோச்சடையில் உள்ள டோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செளபா என்ற செளந்திரபாண்டியன். பிரபல பத்திரிகையாளரான இவர் ’சீவலப்பேரி பாண்டி’ படத்தின் கதாசிரியர். இவருடைய மனைவி லதா பூர்ணம், கோவில்பட்டியில் உள்ள அரசுக் கல்லூரியின் முதல்வர். கருத்துவேறுபாடு காரணமாக லதா பூர்ணம் கோவில்பட்டியில் தனியாக வசித்து வருகிறார்.

இவர்கள் மகன் விவின் (25). போதைக்கு அடிமையான இவரை அடித்துக் கொன்றார் செளபா. இதுதொடர்பாக கைதாகி மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த 22-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> எழுத்தாளர் செளபா திடீர் மரணம்