பாஜக பாணியில் அதிமுக ! ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
tami nadu June 11, 2018,
பாஜக பாணியில் அதிமுக அரசு கருத்துரிமையை நசுக்குகிறது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள கணடன அறிக்கையில், கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் போராட்டங்கள் குறித்து நடைபெற்ற வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை மீதும் அதில் பங்குக் கொண்ட இயக்குனர் அமீர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.வட்ட மேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக புதியதலைமுறை தொலைக்காட்சி மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் பாசிச நடவடிக்கையாகும்.
பாஜக மீது விமர்சனங்களை பதிவுச் செய்யும் ஊடகங்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் நடவடிக்கை போன்றே தமிழக அரசும் புதிய தலைமுறை மீது வழக்கை பதிவு செய்துள்ளது. பாஜக ஆளும் அரசுகளின் பாணியில் கருத்து உரிமையை பறித்துள்ளது.உடனடியாக புதிய தலைமுறை மீதும் இயக்குனர் அமீர் மீதும் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> பாஜக பாணியில் அதிமுக ! ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு