‘என் மனைவியை மீட்டு தாருங்கள்’ – நித்தியானந்தா பீடத்திற்கு எதிராக கணவரின் மனு
tami nadu June 11, 2018,
நித்தியானந்தா பீடத்தில் உள்ள தனது மனைவியை மீட்டு தரக்கோரி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இவர், அங்கிருந்த ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்திற்கு சென்ற தனது மனைவி, இன்று வரை வீடு திரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பதாகவும், எனவே தனது மனைவியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

ராமசாமி கூறுகையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியும், மகனும் நித்தியானந்தா பீடம் சென்றதாக தெரிவித்தார். இதில்தான் சென்று மகனை மீட்டு வந்ததாகவும், ஆனால் மனைவியை மீட்க முடியாமல் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இதனால் பல பிரச்னைகளை தினசரி சந்திப்பதாகவும், எனவே மனைவியை மீட்டு தர மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ‘என் மனைவியை மீட்டு தாருங்கள்’ – நித்தியானந்தா பீடத்திற்கு எதிராக கணவரின் மனு