மீண்டும் இந்திய திரைப்படங்களை திரையிடபாக்., தியேட்டர்கள் முடிவு
India, india cinema, pakistan December 19, 2016,
புதுடில்லி:இந்திய திரை படங்களை திரையிடுவ தில்லை என்ற தற்காலிக முடிவை விலக்கி கொள்ள, பாகிஸ்தான் தியேட்டர் உரிமையாளர் கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல், பாகிஸ்தான் தியேட் டர்களில், இந்தியப் படங்கள் மீண்டும் திரையிடப்பட உள்ளன.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக, ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’
எனப்படும் தாக்கு தல் உட்பட பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.
இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியத் திரைப் படங்களைதிரையிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக, பாகிஸ்தான் தியேட்டர் உரிமையாளர் கள் சங்கம் அறிவித்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற சூழ்நிலை குறைந்துள்ள நிலையில், மீண்டும், இந்தியத் திரை படங்களை வெளியிடுவது என, பாகிஸ்தான் தியேட் டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல், இந்திய படங்கள், பாகிஸ் தான் தியேட்டரில் திரையிடப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே, 1965ல் நடந்த போரைத் தொடர்ந்து, இந்திய படங்களைத் திரையிட பாகிஸ்தான் தடை விதித்துஇருந்தது. இந்தத் தடை விலக்கி கொள்ளப்பட்டு, 2008 முதல் இந்திய படங்கள் திரையிடப்படுகின்றன.
காரணம் என்ன?
பாகிஸ்தான் தியேட்டர்உரிமையாளர் சங்கம்கூறியுள்ளதாவது: தியேட்டர்களின் வருமானத் தில், 75 சதவீதம், இந்திய படங்களை திரையிடு வதால் தான் கிடைக்கிறது.
தியேட்டர்களின் வருமானம் குறைந்து வருவ தால், தற்காலிக மாக நிறுத்தப்பட்ட, இந்தியப் படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
English Summary:
India does not release the temporary decision to remove the screen shots, Pakistan has decided the theater owner’s association. Accordingly, starting today theater in Pakistan, Indian films are to be screened again.
Source: மீண்டும் இந்திய திரைப்படங்களை திரையிடபாக்., தியேட்டர்கள் முடிவு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.