சட்டப்பேரவைக் கூட்டம்: கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்
tami nadu May 29, 2018,
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியது. அவை கூடியவுடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 7 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று பேரவைக்கு மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். அதே போல காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி , தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான பதாகையை கையில் ஏந்தியபடி அவைக்கு வருகை தந்தார். முன்னதாக இன்றைய அவை நிகழ்வுகளை ஒத்திவைத்து நாள் முழுவதும் தூத்துக்குடி சம்பவம் குறித்து விவாத வேண்டும் என திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> சட்டப்பேரவைக் கூட்டம்: கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்