தூத்துக்குடி போராட்ட நிகழ்வுகள்: பேரவையில் முதல்வர் அறிக்கை
tami nadu May 29, 2018,
தூத்துக்குடியில் மக்கள் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாமல் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பேரவையில் முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார். அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 22ஆம் தேதி தடையை மீறி, சில அரசியல் கட்சிகள் போராட்டக் குழுவினருடன் இணைத்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை கூறியுள்ளார். கூட்டத்தில் சிலர் ஊடுருவி காவல்துறையினர் மீது கல்லெறிவது, ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்துவது, வாகனங்களுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்தப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் அமைதி திரும்ப ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதையும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 4 அமைச்சர்கள் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, நிவாரணத் தொகையை வழங்கியதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தூத்துக்குடி போராட்ட நிகழ்வுகள்: பேரவையில் முதல்வர் அறிக்கை