ஜல்லிக்கட்டு! அலங்காநல்லூரில் காத்திருக்கிறது மெகா பரிசு மழை
Uncategorized February 4, 2017,
அலங்காநல்லூரில் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார், டிராக்டர், புல்லட், எக்சல் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்க உள்ளது அலங்காநல்லூர் விழா குழு.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது . இதனையொட்டி இரண்டு நாள்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 880 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது . மாவட்ட ஆட்சியர், இன்னும் 100 காளை வரை டோக்கன் வழங்குகள் என்று அறிவுறுத்தியுள்ளார் . விழா குழு, மொத்தம் ஆயிரம் காளைகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளது .
இதையடுத்து, வரும் 10ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், சிறந்த மாடுகளுக்கு, மாடுபிடி வீரர்களுக்கு கார், டிராக்டர் , புல்லட், எக்சல் உள்ளிட்ட பல பம்பர் பரிசுகளை அலங்காநல்லூர் விழா குழு வழங்க இருக்கிறது.
போட்டியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஊரை சுற்றி பத்து எல்இடி டிவி வைக்கப்படுகிறது. காளைகளை வளர்க்க விவசாயிகள் கஷ்டப்படும் நிலையில் இருப்பதால் வெற்றி பெறும் காளைகளுக்கு விவசாயம் சார்ந்த பொருட்கள் அதிகம் வழங்கப்பட இருக்கின்றன.
-சே.சின்னதுரை
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.