நைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கிய திருப்பூர் மக்கள்!
tami nadu March 16, 2018,
திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் மீது மோதிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
திருப்பூர் அருகே நைஜீரிய இளைஞர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஊத்துகுளி பகுதியில் செல்லும் போது, அப்பகுதியாக திருப்பூரை சேர்ந்த தம்பதியினர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஆனால் அதிவேகமாக சென்ற நைஜீரிய இளைஞர்கள், கட்டுப்பாடின்றி அந்தத் தம்பதியினர் மீது மோதியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கினர். அத்துடன் அந்த இளைஞர்களின் செல்போனையும் உடைத்தெறிந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> நைஜீரிய இளைஞர்களை சரமாரியாக தாக்கிய திருப்பூர் மக்கள்!