ஆளுநர் மாளிகைக்கு பொருட்கள் வாங்க போலி பில்: ஒருவர் கைது
tami nadu February 28, 2018,
ஆளுநர் மாளிகைக்கு பொருட்கள் வாங்க போலி பில் தயாரித்து மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு மரச் சாமான்கள் உள்ளிட்ட பல பொருட்களை அடையார் பகுதியை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர்தான் வாங்கி கொடுத்து வந்திருக்கிறார். பல நாட்களாக இவர் இந்த வேலையை செய்து வந்த நிலையில், இதில் மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்திருக்கிறது.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வாங்கிய பல பொருட்களுக்கு போலி பில் தயாரித்து மோசடி நடைபெற்றது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அடையார் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ் என்பவரை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்தில் முகமது யூனிஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ஆளுநர் மாளிகைக்கு பொருட்கள் வாங்க போலி பில்: ஒருவர் கைது