மீண்டும் முடங்கும் அபாயத்தில் ஏர்செல்

மீண்டும் முடங்கும் அபாயத்தில் ஏர்செல்

tami nadu

ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதன் தென்னிந்திய சி.இ.ஓ சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். ஆத்திர அவசரத்திற்குக் கூட மற்றவர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்னர் ஆன் செய்ததையடுத்து சிக்னல் கிடைக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதன் தென்னிந்திய சி.இ.ஓ சங்கர நாராயணன் இன்று தெரிவித்துள்ளார். இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஏர்செல்லை பலரும் கைவிட்டு வரும் நிலையில் ஏர்செல்லின் இந்த அறிவிப்பு அதற்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> மீண்டும் முடங்கும் அபாயத்தில் ஏர்செல்

Search

Back to Top