அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினார் தீபா
Uncategorized February 3, 2017,
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் இன்று. இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் காலை முதலே வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அண்ணாவின் நினைவிடத்துக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது, அவரின் ஆதரவாளர்கள் நிறைய பேர் உடன் இருந்தனர்.
படம்:ஜெரோம்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.