கடல் என்ன கிணறா? எண்ணூரில் விஜயகாந்த் நையாண்டி
Uncategorized February 3, 2017,
எண்ணெய் கழிவுகளை வாளியில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.
எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி ’எம்.டி.டான் காஞ்சிபுரம் (MT Dawn)' என்னும் சமையல் எரிவாயு கப்பல் மீது ’எம்.டி.பிடபுள்யூ மாப்பிள் (BW Maple)' என்னும் எண்ணெய் கப்பல் மோதியது. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் கலக்கப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணூர் கடல் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றார். அப்போது, கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, எண்ணெய் கழிவு அகற்றப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி மிக மெதுவாக நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினார்.
கழிவுகளை வாளிகளில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா என கேள்வி எழுப்பிய விஜயகாந்த், எண்ணெய் அகற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், புதிய உபகரணங்களை வாங்கி எண்ணெய் கழிவை அகற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.