குடிபோதையில் 9 குட்டி நாய்களை துடி துடிக்க கொன்ற கொடூர மனிதர்..!
tami nadu February 1, 2018,
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் 9 குட்டி நாய்களை கட்டையால் அடித்து கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தெரு நாய் ஒன்று சில தினங்களுக்கு முன்பு 9 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளை குணா என்பவர் குடிபோதையில் உருட்டுக் கட்டையால் தலையிலேயே அடித்து துடி துடிக்க கொன்று விட்டு, நாய் குட்டிகளை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாசி கார்த்திக் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணா மீது சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> குடிபோதையில் 9 குட்டி நாய்களை துடி துடிக்க கொன்ற கொடூர மனிதர்..!