தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம்: ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம்: ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்

tami nadu

தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்காக உலக வங்கியிடம் இருந்து 318 மில்லியன் டாலர் அதாவது 2,037 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கிக்கு இடையேயான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை இணை செயலாளர் சமீர் குமார் கரே, தமிழ பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், உலக வங்கியின் திட்ட தலைவர் ஜான் பிலாம்கிஸ்ட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நீர் மேலாண்மை திட்டங்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான நவீன தொழில்நுட்பங்களை பெறுதல், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் விவசாயம் தொடர்பான திட்டங்களை மேம்படுத்த இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 5,00,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள். 4800 பாசன குளங்கள் மற்றும் 477 தடுப்பணைகளை புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் இந்த கடனுதவி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> தமிழகத்தின் விவசாய நவீன மயமாக்கல் திட்டம்: ரூ.2,037 கோடி கடன் பெற ஒப்பந்தம்

Search

Back to Top