நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் தற்கொலை முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் தற்கொலை முயற்சி

tami nadu

அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியே விலகாத நிலையில், மாறாந்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆலங்குளம் அருகே மாறாந்தை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் தனது மனைவி திவ்யதர்ஷினி, 6 வயது மகள், 4 வயது மகனுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றார். தனது சொத்துகளை உறவினர்கள் போலிச்சான்றிதழ் தயாரித்து அபகரித்து விட்டதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி அசோக்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனை பார்த்தவர்கள் அவர்களை தடுத்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் தற்கொலை முயற்சி

Search

Back to Top