குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் கும்பல்: பொதுமக்கள் தர்மஅடி

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் கும்பல்: பொதுமக்கள் தர்மஅடி

tami nadu

திருவண்ணாமலையில் பெண் குழந்தையை கடத்திய வடமாநில இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்டீபன் என்பவரது 5 வயது மகள் வில்ஸி அண்ணாநகரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் குழந்தையை ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கடத்தி சென்றனர். அப்போது அதை பார்த்த சிலர் கூச்சலிட்டு அவர்களை நோக்கி ஓடினர். இதனால் குழந்தை வில்ஸியை விட்டுவிட்டு அவர்கள் தப்பியோடினர். அதில் ராம்சிங் என்ற இளைஞனை பிடித்த பொதுமக்கள் அவனை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள், ராம்சிங்கை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் கும்பல்: பொதுமக்கள் தர்மஅடி

Search

Back to Top