ராமநாதபுரத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம்

ராமநாதபுரத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம்

tami nadu

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் வறட்சி கா‌ரணமாக தண்ணீரை விலைக்கு ‌வாங்கி மிளகாய் சாகுபடி செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்குடி, பெருநாழி, குமராபுரம்,‌ சண்‌முகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை பெய்‌யாததால் நெல் விவசா‌யம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மானாவாரி பயிரான மிளகாய் விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இதற்கும் தற்போது தண்ணீர் இல்லாததால் டிராக்டரில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி குடங்களில் சுமந்து சென்று மிளகாய்ச் செடிகளுக்கு ஊற்றுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ‌மிளகாய் பயிரிட பெருமளவு செலவு செய்துள்ளதாகவும், அதனைத் திருப்பி ஈட்ட முடியுமா என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் வட்டியில்லா கடன் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ராமநாதபுரத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம்

Search

Back to Top