ஸ்பிரிட் ஆல்கஹால் குடித்த இருவர் உயிரிழப்பு
tami nadu December 29, 2017,
மது ஆசையில் மருத்துவத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஆல்கஹாலை குடித்த திருவாரூரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வெங்காரம்பேரையூரைச் சேர்ந்த கண்ணன், ராஜூ ஆகியோரின் நண்பரான ரவிக்குமார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். மருத்துவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஆல்கஹாலை கண்ணன், ராஜூ, சதீஷ் ஆகியோரிடம் குப்பை எரிப்பதற்காக ரவிக்குமார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மது ஆசையால் ரவிக்குமாரின் நண்பர்கள் மூவரும் அதனைத் குடித்தாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் கண்ணன், ராஜூ ஆகியோர் உயிரிழந்தனர். சதீஷூக்கு தீவிர சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரவிக்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ஸ்பிரிட் ஆல்கஹால் குடித்த இருவர் உயிரிழப்பு