தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி மூவர் பலி
tami nadu December 29, 2017,
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் வஉசி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர், அவரது மகன் அருண்குமார், ராஜேந்திரன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஆலையின் இயந்திரத்தில் சிக்கி மூவரும் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வேலூர் எஸ்பி பகலவன், ராணிப்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். தோலை சூடுபடுத்தி வெறியேற்றும் இயந்திரம் அருகே பணியாற்றும்போது, அதில் ஒருவர் சிக்கியுள்ளார் என்றும், அவரை காப்பாற்றுவதற்காகச் சென்ற மற்ற இருவரும் அதே இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் விஜயகுமாரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி, நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி மூவர் பலி