தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது : பட்ஜெட் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம்

Uncategorized

பட்ஜெட் குறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முந்தைய பட்ஜெட்களை  விட, இந்த பட்ஜெட் முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. குறிப்பாக ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைத்தது வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு நிதி ஒதுக்கியது உள்ளிட்ட திட்டங்களை தமிழகம் வரவேற்கிறது.  ஆனால், மத்திய பட்ஜெட்டில் இருந்து தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. குறிப்பாக தமிழக வறட்சி குறித்து, குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை மனதில் வைத்து  விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கலாம். அதேபோல், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும். இதை மத்திய அரசு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

Source: தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது : பட்ஜெட் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் – Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top