மெரினா வன்முறை : விசாரணை நீதிபதி நியமனம்
chennai, marina, retired judge, tamil nadu February 1, 2017,
சென்னை : சென்னை மெரினாவில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க, விசாரணை நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடந்த வன்முறை நடந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததை அடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, மெரினா வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெரினாவில் நடந்த கலவரம் மட்டுமின்றி, மதுரை, கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்தும் இக்குழு விசாரித்து அறிக்கை அளிக்க உள்ளது.
English Summary:
Chennai Marina investigate the violent incident, the trial judge, a retired judge appointed rajesvaran.
Source: மெரினா வன்முறை : விசாரணை நீதிபதி நியமனம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.