“தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்”- வானிலை மையம்

“தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்”- வானிலை மையம்

tami nadu

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்தது. கிண்டி, வளசரவாக்கம், கே.கே.நகர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. பின்னர் விட்டுவிட்டு தூறல் போட்டது.

இதன்காரணமாக, நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வங்கக்கடலில் வரும் 30-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> “தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்”- வானிலை மையம்

Search

Back to Top