கத்தி மு‌னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

கத்தி மு‌னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

tami nadu

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கத்தி மு‌னையில் பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இரவில் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் அந்த மாணவியிடம் கத்தியை காட்டி‌ மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்‌படுகிறது. மேலும், மாணவியிடமிருந்து பணம், நகை மற்றும் வாட்ச் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர்‌.

இதனையடுத்து அந்த மா‌ணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 4 இளைஞர்களை‌ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கொல்லப்பட்டி புதூரை சேர்ந்த சரவணன் என்பவரை தேடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கத்தி மு‌னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

Search

Back to Top