போராட்டத்தில் உள்ள இளைஞர்களை முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்து பேச ஸ்டாலின் வலியுறுத்தல்

chennai, dmk, Jallilkattu, MK stalin, O paneer selvam, struggle, tamil nadu
சென்னை : போராட்டத்தில் உள்ள இளைஞர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேச வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தடையின்றி ஜல்லிக்கட்டு நடக்க அவசரச் சட்டம் உதவும் என்று முதல்வர் நேரில் விளக்க வேண்டும். நீதிமன்ற தடை வராதபடி அரசால் என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மக்களின் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை அசைய வைத்துள்ளது. மக்களின் நம்பிக்கை பெறாத நிலையில் அவசரச் சட்டம் நடைமுறை பயனை தராது என்று கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்கவும், அனுமதி நிலவவும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary:

Chennai: In the struggle to talk to the young Chief Minister and DMK wealth opanner Action leader MK Stalin insisted. Jallikattu walk freely in the first instance to explain the ordinance, that will help. What effort has been taken by the Government to come to the court raised the question of Stalin. 

Source: போராட்டத்தில் உள்ள இளைஞர்களை முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்து பேச ஸ்டாலின் வலியுறுத்தல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top