ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி

death, Jallilkattu, pudukottai, tamil nadu
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்ற வீரர் ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றனர்.

எதிர்ப்பு போராட்டம்:

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் மறியல் போராட்டம் நடத்தினர். அவசர சட்டம் இயற்றப்பட்டாலும் நிரந்தர தீர்வு வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் காலையில் புதுக்கோட்டை ராப்பூசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். ஆனால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இலுப்பூரில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தினால் பதட்டம் நீடித்தது.

இதற்கிடையில் மாடு பிடி வீரர் மோகன் ( வயது 30 ) மாடு முட்டியதில் படுகாயமுற்றார். ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் உயிரிழந்தார்.

English summary:

Pudukkottai: jallikattu in Pudukkottai soldier who participated in the offering. Another 12 people were wounded.

Source: ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top