அரசின் அங்கீகாரம் பெறாத 760 பள்ளிகள் மூடப்படுமா?

அரசின் அங்கீகாரம் பெறாத 760 பள்ளிகள் மூடப்படுமா?

tami nadu

தமிழக அரசின் அங்கீகாரத்தை இந்த மாத இறுதிக்குள் பெற தவறும் 760 பள்ளிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளிகள் அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அப்போது, விதிகளின்படி, பள்ளிகளுக்குத் தேவையான நிலம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ‌இதற்காக பள்ளிக்கல்வி ‌இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அனைத்து த‌னியார் பள்ளிகளும் ‌மே 20 முதல் 22க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் அங்கீகாரத்தை இந்த மாத இறுதிக்குள் பெற தவறும் 760 பள்ளிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அங்கீகரிக்கப்படாத சில பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சிகள் செய்துவருவதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக திருப்பூரில் 86 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலும் சில பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்குவது தெரியவந்துள்ளது. 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> அரசின் அங்கீகாரம் பெறாத 760 பள்ளிகள் மூடப்படுமா?

Search

Back to Top