மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
tami nadu April 25, 2019,
வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பாதுகாப்பு கருதி மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 24 மணி நேரத்தில், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை