‘முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது’ – கமல் பேட்டி 

‘முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது’ – கமல் பேட்டி 

tami nadu

முள்ளும் மலரும் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “வெகு நாள் நண்பர். எனக்கு என் பக்கத்து ஊர்க்காரர். திறமையாளர் என நான் வியந்தமனிதர். முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. முள்ளும் மலரும் அற்புதமான படம். அவரை பார்த்து சினிமா எடுக்க ஒரு கூட்டமே வந்தது. உச்சத்தை தொட்டவர், அவருடன் படங்கள் குறைவாக செய்தாலும் நட்பு அதிகம். நினைவுகளை தமிழ் சினிமா தாங்கி நிற்கும்” என்று கூறினார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ‘முள்ளும் மலரும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது’ – கமல் பேட்டி 

Search

Back to Top