ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

tami nadu

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற ஏராளமான மீனவர்கள், கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இ‌லங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 2 படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையி‌னர் 13 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே 2 தினங்களுக்கு முன் இலங்கை கடற்படையினர் 11 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மீனவ அமைப்பினர் இந்த பிரச்னைக்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Search

Back to Top