“மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” – வைகோ
tami nadu March 27, 2019,
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றது. ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் கணேச மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கிடையே கூட்டணி தலைமைக் கட்சியான திமுகவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி இன்று, வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காத்தவராயன் ஆகியோருக்கு ஆதரவாக, குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் குடியாத்தத்தில் ரிங்ரோடு அமைக்கப்படும் என்றார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அதற்கு ஆதரவாக செயல்படும் மாநில அரசுக்கும் மக்கள் பாடம்புகட்ட வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> “மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” – வைகோ