சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு : போலீசார் விரட்டியடிப்பு
manju virattu, Singampunari, tamil nadu January 15, 2017,
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதை தடுக்க வந்த போலீசாரை பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுப்ரீம் கோர்ட் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதனை வேடிக்கை பார்ப்பதற்கும், மஞ்சுவிரட்டில் காளைகளை பிடிப்பதற்கும் சுமார் 10,000 பேர் திரண்டிருந்தனர். தடையை மீறிய மஞ்சுவிரட்டு நடத்த முயன்றவர்களை போலீசார் விரட்டி அடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை சுற்றி வளைத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், போலீசாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், போலீசாரையும் விரட்டி அடித்தனர். போலீசாரை விரட்டிய பிறகு, தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
English Summary:
Singampunari: Sivaganga district manjuvirattu singampunari conducted in defiance of the ban. To prevent this, the police chased the public.
Source: சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு : போலீசார் விரட்டியடிப்பு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.